தேஜஸ் சொகுசு ரயிலில் பாதிப்புக்குள்ளாகும் ஊழியர்கள்!

டெல்லி, லக்னோ இடையே இயங்கும் தேஜஸ் ரயிலில் பணியாற்றும் ஊழியர்கள் காலதாமதமான ஊதியம், 18 மணி வேலைநேரம் என்று சக்கையாக பிழியப்படுகிறார்கள் என்று புகார்கள் எழுந்துள்ளன.


தனியார், பொது கூட்டளிப்பு என்ற அடிப்படையில் இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. சமையல், உணவு தயாரிப்பு, சுகாதாரம் ஆகியவை ஐஆர்சிடிசி மூலம் நிர்வகிக்கப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய இந்த ரயிலில் பயணிகளுக்கான வசதிகள் பற்றி பேசும் முன்பாக, ஊழியர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இது குறித்து அந்த ரயிலின் ஊழியர்கள், “உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போதும் பணியாற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறோம். மீறினால் பணிநீக்கம் செய்யப்படுகிறோம். இதுவரை கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். எந்த வித முன்னறிவிப்பும் கொடுக்கப்படுவது இல்லை.